•  

     

     

    அரச சேவையில் நேர்மையாக தமது கடமைகளை நிறைவேற்றும் அலுவலர்களை கௌரவிக்கும்

    இன்டகிரிட்டி ஐக்கன் 2022/23

    நேர்மையின் மீது ஓர் ஒளி பிரகாசிக்கட்டும்!

இன்டகிரிட்டி ஐக்கன் 2022/23

இலங்கையில் அரச சேவையில் நேர்மையுடன் செயற்படுகின்ற அதேவேளை உரிய கடமைகளுக்கும் சேவைகளுக்கும் மேலதிகமாக பொதுமக்களின் நலன்களுக்காக தம்மை அர்ப்பணிக்கின்ற அரச ஊழியர்களை கெளரவிக்கும் செயற்பாட்டினை ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நெஷனல் ஸ்ரீ லங்கா நிறுவனம் முன்னெடுத்துச் செல்கிறது.

உலகளாவிய அமைப்பான அகவுண்டபிலிட்டி லெப் (Accountability Lab) அமைப்பின் கருத்தமைக்கப்பட்ட இந்த இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது, தமது சமூக மட்டத்தில் நேர்மைத்திறன் தொடர்பில் நேர்மறையான சிந்தனைகளை உருவாக்கி அதனை செயல்படுத்த முனையக் கூடியவர்களை ஆதரிக்க முயல்கிறது. இப்பிரச்சாரமானது 2018ம் ஆண்டு தொடக்கம் ஒவ்வொரு வருடமும் நடாத்தப்பட்டு வருகிறது. இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) 2022/23 இற்கான விண்ணப்பங்கள் மற்றும் பரிந்துரைகள் இன்று முதல் ஏற்றுக்கொள்ளப்படுகிறது என்பதனை மகிழ்ச்சியுடன் அறியத் தருகின்றோம்.

இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது உள்ளக மற்றும் வெளிப்புற அழுத்தங்களை தாண்டி ஊழலுக்கு எதிராகவும் தமது தொழில் பணிகளை நேர்மையுடனும் மேற்கொள்ளும் அரச ஊழியர்களை கெளவிக்க முயல்கிறது. கடந்த ஆண்டு இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) பிரச்சாரமானது “கோவிட்டைத் தடுப்பதற்காக செயலாற்றும் சாதனையாளர்கள்”எனும் அடையாளத்துடன் கொவிட்-19 தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்த செயலாற்றிய முன்கள அரச ஊழியர்களை கெளரவித்தது. ஆனால் இம்முறை இன்டகிரிட்டி ஐக்கன் (நேர்மைக்கு மகுடம்) விருதுக்கு விண்ணப்பிக்க மற்றும் பரிந்துரைக்க பொதுத் துறையில் பணியாற்றும் அனைவருக்கும் வாய்ப்பளிக்கிறது.

கையேட்டினை முழுமையாக வாசித்த பின்னர் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யுங்கள்:

பரிந்துரைப் படிவங்களைச் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு : 17 பெப்ரவரி 2023

back to top